சைக்கிளில் இந்தியா முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணம் : இயற்கை வளங்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாக்க வலியுறுத்தி - இலங்கை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் !!!
சைக்கிளில் இந்தியா முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணம் : இயற்கை வளங்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாக்க வலியுறுத்தி - இலங்கை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் !!!

சைக்கிளில் இந்தியா முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணம் : இயற்கை வளங்கள், சுற்றுப்புற சூழல் பாதுகாக்க வலியுறுத்தி - இலங்கை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் !!!
இலங்கை சேர்ந்த சமூக ஆர்வலர் பிரதாபன் தர்மலிங்கம் இந்தியாவில் இயற்கை வளங்களையும் வன உயிர் குளங்களையும் சுற்றுப்புற சூழல் பாதுகாக்க வலியுறுத்தியும் சைக்கிளில் இந்தியா முழுவதும் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று 107 வது நாளான கேரளா வழியாக கன்னியாகுமரி மாவட்டத்தில் வந்தடைந்த அவருக்கு சமூக ஆர்வலர் K. அருள் செல்வன், சமூக சேவகர் குளச்சல் முகம்மது சபீர் மற்றும் கவிஞர் இனியன் தம்பி, வழக்கறிஞர் ஜெயபாரதி, ஹபீஸ்.சுல்பிக்கர், சுலைமான், முஜிப்ரகுமான், அமீர்கான், மாகீன் , இப்ராஹிம், வேல்முருகன், இடலை சாகுல் ஆகியோர் சிறப்பான முறையில் இந்தியா வந்து இருக்கும் பிரதாபன் தர்மலிங்கத்தை வரவேற்று வாழ்த்தி பாராட்டுகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர் கன்னியாகுமரியில் இருந்து ராமேஸ்வரம் வழியாக பாண்டிச்சேரி சென்று அதன் பின்பு சென்னை மத்திய ரயில் நிலையத்தில் தனது பயணத்தின் இலக்கை 15000 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்கிறார்.
What's Your Reaction?






