ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயன பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ : சயன சேவையில் பெரிய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயன பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ : சயன சேவையில் பெரிய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சயன பெருமாள் கோவிலில் புரட்டாசி பிரமோற்சவ : சயன சேவையில் பெரிய பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், வைணவத் தலங்களில் மிக சிறப்பு வாய்ந்த தலமாகும். இங்கு ஆதி காலம் முதல் பரம்பொருளாகிய மகாவிஷ்ணு வடபத்ர சாயி என்ற பெயர் கொண்டு ஸ்ரீதேவி பூதேவி உடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
இந்த வட பத்திர சைன பெருமாளுக்குத் தான் 'ஆண்டாள்' பூ மாலை சூடி அழகு பார்த்து, பாமாலை பாடினார்.
இதன் காரணமாக ஆண்டாள், 'சூடிக்கொடுத்த சுடர் கொடியாள்' என்னும் சிறப்பு பெயர் பெற்றார்.
ஆழ்வார்களில் முதன்மையான பெரியாழ்வாரும், ஆண்டாளும் ஒரு சேர மங்கள சாசனம் செய்து வழிபட்ட சிறப்புடைய 'வடபத்ரசாயி பெருமாள்' புரட்டாசி திருவோண பிரம்மோற்சவம் கடந்த 04.10.2024 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7 நாள் பெருமாள் 'சயனசேவை'யில் ஸ்ரீதேவி, பூமிதேவி உடன் பெரிய பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
வரும் 12 ஆம் தேதி ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத பெரிய பெருமாள் செப்புத் தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
What's Your Reaction?






