மக்களுடன் முதல்வர் பயனாளிகள் : ரூ 2 கோடி நல திட்ட உதவிகள் - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
மக்களுடன் முதல்வர் பயனாளிகள் : ரூ 2 கோடி நல திட்ட உதவிகள் - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.

மக்களுடன் முதல்வர் பயனாளிகள் : ரூ 2 கோடி நல திட்ட உதவிகள் - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வழங்கினார்.
தருமபுரி அரசு கலைக் கல்லூரி கலையரங்கத்தில் ஊரக பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் பயன்பெற்ற 142 பயனாளிகளுக்கு ரூ.2 கோடி மதிப்பில் அரசு நல திட்ட உதவிகள் மற்றும் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் பல்வேறு அரசு நலத் திட்ட உதவிகளை வேளாண்மை - உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித் தலைவர் கி.சாந்தி முன்னிலையில் வழங்கினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஊரகப் பகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்களில் கோரிக்கை மனுக்கள் வழங்கி, பயன்பெற்ற பயனாளிகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.1.89 இலட்சம் மதிப்பில் சக்கர நாற்காலி, செயற்கை கால்கள், பேட்டாரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.14.14 இலட்சம் மதிப்பில் சூரிய உலர்த்தி, சூரிய சக்தியால் இயங்கும் பம்ப் செட்டுகளையும், வேளாண்மைத் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.3.17 இலட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த பண்ணையம், ரொட்டோ வேட்டர்களையும், தோட்டக் கலை மற்றும் மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.15,150/- மதிப்பில் பழச்செடி தொகுப்பு, நகரும் காய்கறி வண்டியினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் சார்பில் 87 பயனாளிகளுக்கு ரூ.13.19 இலட்சம் மதிப்பில் காய்கறி, பூ வியாபாரம், சிற்றுண்டி கடை, பெட்டிகடை, உணவகம், கோழி வளர்ப்பு போன்றவற்றிற்கான கடனுதவிகள், கிறித்துவ நலவாரிய அடையாள அட்டைகள், தையல் இயந்திரங்களையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 25 பயனாளிகளுக்கு தலா ரூ.5.00 இலட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு என ரூ.1.25 கோடி மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட அட்டைகள் என மொத்தம் 142 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி மதிப்பில் அரசு நலதிட்ட உதவிகள் மற்றும் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் 391 பயனாளிகளுக்கு ரூ.51.89 இலட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் ஆக மொத்தம் 533 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடியே 9 இலட்சத்து 43 ஆயிரத்து 278 (ரூ.2,09,43,278/-) மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
பின்னர் வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பொதுமக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைதரம் உயரவும் பல்வேறு திட்டங்கள் மற்றும் பணிகளை அறிவித்து, செயல்படுத்தி வருகின்றார்கள். மேலும், மகளிரின் நலன் காத்து அவர்களது உரிமைகளை நிலை நாட்டுவதில் எப்போதும் அக்கறையுடன் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.
தருமபுரி மாவட்டத்தில் தான் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் முதன் முதலில் 1989-ஆம் ஆண்டு ஏழை எளிய மகளிரைக் கொண்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் துவங்கப்பட்டது. மகளிர் சுய தொழில் மேற்கொண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றது.
புதுமைப் பெண் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கலை, அறிவியல், பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரிகளில் பயிலும் சுமார் 3.28 இலட்சம் மாணவிகள் பயனடைந்து உள்ளனர். மேலும் தருமபுரி மாவட்டத்தில் 59,963 விவசாயிகளுக்கு ரூ.28.00 கோடி மதிப்பில் பயிர் காப்பீடு கடன் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு முதலமைச்சரின் 3 ஆண்டுகால ஆட்சியில் 18 இலட்சம் மக்கள் தொகை கொண்ட தருமபுரி மாவட்டத்தில் சுமார் 3 இலட்சத்து 57 ஆயிரம் பயனாளிகள் அரசு நலத் திட்ட உதவிகளை பெற்று பயன்பெற்று உள்ளனர்.
தருமபுரி மாவட்ட பொதுமக்கள் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தி வருகின்ற எண்ணற்ற பல திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் மென்மேலும் முன்னேற்றம் அடைவதோடு, வாழ்வாதாரத்திலும், பொருளாரத்திலும் சிறப்பான நிலையை அடைய வேண்டும் என்று வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், பென்னாகரம் சட்ட மன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, இன்பசேகரன், வருவாய் கோட்டாட்சியர் இரா.காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, நகர்மன்றத் தலைவர் மா.இலட்சுமி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணியம், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன், கைம்பெண் நல வாரிய உறுப்பினர் ரேணுகாதேவி, வட்டாட்சியர்கள் கணிமொழி, சண்முகசுந்தரம், ஊராட்சி மன்றத் தலைவர் கவிதா முருகன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?






