மது குடிக்க பணம் கேட்டு பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் மகன் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு
மது குடிக்க பணம் கேட்டு பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் மகன் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம்
*கோவில்பட்டியில் மது குடிக்க பணம் கேட்டு பெற்ற தாயை கொடூரமாக தாக்கும் மகன் - வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பு*
*தாயை தாக்கிய ராமகிருஷ்ணை கைது செய்து கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை*
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சீனிவாசா நகர் பகுதியை சேர்ந்த சரஸ்வதி வயது ( 80) இவரது மகன் ராமகிருஷ்ணன். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாகி தாயிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்து உள்ளார்.
இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் இருந்து தாயை வெளியே இழுத்து போட்டு செங்கற்களால் கொடூரமாக தாக்கி உள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிலையில் மது குடிக்க பணம் கேட்டு
பெற்ற தாய் சரஸ்வதியை வீட்டில் இருந்து வெளியே இழுத்து போட்டு வீதியில் தள்ளி துன்புறுத்தி செங்கலை வைத்து தலையிலும் உடலிலும் மாறி மாறி அடித்து கொடூரமாக தாக்குதல் நடத்திய மகன் ராமகிருஷணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதுவிற்க்காக தாயை கொடூரமாக தாக்கும்நெஞ்சை பதற வைக்கும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
What's Your Reaction?






